செய்திகள்,திரையுலகம் நடிகர் ஆமீர்கானை இயக்க விரும்பும் ராஜமௌலி!…

நடிகர் ஆமீர்கானை இயக்க விரும்பும் ராஜமௌலி!…

நடிகர் ஆமீர்கானை இயக்க விரும்பும் ராஜமௌலி!… post thumbnail image
சென்னை:-‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் தெலுங்குத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தற்போது ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை பல கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தென்னிந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை தற்போது தமிழ்த் திரையுலகில் ஷங்கர், தெலுங்குத் திரையுலகில் ராஜமௌலி ஆகியோரைத்தான் பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் என்று குறிப்பிடுகிறார்கள். ஷங்கர் ‘முதல்வன்’ படத்தை ‘நாயக்’ என்ற பெயரில் இயக்கி அங்கு வெற்றி பெற முடியாமல் திரும்பி வந்துவிட்டார். அதன் பின் அவர் ஹிந்திப் படங்கள் பக்கமே போகவில்லை. அவர் இயக்கிய தமிழ்ப் படங்கள்தான் ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்யப்படுகின்றன.தென்னிந்திய இயக்குனர்களைப் பொறுத்தவரையில் ஹிந்தியிலும் சென்று வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

ஆனால், அது ஒரு சிலருக்கு இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இதனிடையே, இயக்குனர் ராஜமௌலி ஹிந்திப் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டிருக்கிறார். எனக்கு ஒரு ஆமீர் கானை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசை. அவரும் அதை ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன், என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி