செய்திகள்,திரையுலகம் தொழிலதிபருக்கு இரண்டாவது மனைவியாக மாட்டேன் – பிரியாமணி!…

தொழிலதிபருக்கு இரண்டாவது மனைவியாக மாட்டேன் – பிரியாமணி!…

தொழிலதிபருக்கு இரண்டாவது மனைவியாக மாட்டேன் – பிரியாமணி!… post thumbnail image
சென்னை:-தெலுங்கு, கனனடம் என்று சென்ற நடிகை பிரியாமணிக்கு இப்போது வரை அந்த மொழிகள்தான் ஆதரித்து வருகிறது.ஆனபோதும், பிரியாமணியின் மார்க்கெட் அடங்குவதற்கான சூழ்நிலை தெரிகிறது. அதனால் இந்த மரியாதையோடு திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவெடுத்திருக்கிறாராம். இந்த தகவல் அறிந்த ஒரு பிரபல தொழிலதிபர், தனக்கு இரண்டாவது மனைவியாக வருமாறு பிரியாமணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம்.

அதைக்கேட்டு டென்சனாகி விட்டாராம் பிரியாமணி. 40 வயது நடிகைகளே முதல் மனைவியாக சென்று கொண்டிருக்கும்போது, இரண்டாவது மனைவியாக போகும் அளவுக்கு எனக்கொன்றும் வயதாகி விடவிலலை என்று அந்த அழைப்பை நிராகரித்து விட்டாராம். அதோடு, ஏற்கனவே தான் ரகசியமாக காதலித்து வரும் ஒளிப்பதிவாளர் பற்றியும் இந்த இடத்தில் கூறியிருக்கும் பிரியாமணி, தொழிலதிபருக்கு இரண்டாவது மனைவி ஆவதை விட, ஒளிப்பதிவாளருக்கு முதல் மனைவி ஆவது எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி