அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!…

தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!…

தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!… post thumbnail image
புதுடில்லி:-பாரதப் பிரதமர் மோடி பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். அதைபோல் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இதனைத்தொடர்ந்து அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாளில் தூய்மை இந்தியா என்ற தூய்மைப்படுத்தும் திட்டம் துவக்கி வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.அதன்படி இன்று காலை காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்திய மோடி, வால்மிகி காலனிக்கு சென்றார். அங்குள்ள வால்மிகி மந்திர் சென்று வழிபட்டார். அங்குள்ள காந்தி படத்திற்கு மாலை தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் குப்பைகளை கூட்டி குப்பைத் தொட்டியில் போட்டு தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி