அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் வாஷிங்டனில் காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய மோடி!…

வாஷிங்டனில் காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய மோடி!…

வாஷிங்டனில் காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய மோடி!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து நாள் பயணத்தின் கடைசி நாளான இன்று மோடி இந்திய தூதரகத்திற்குச் சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் சென்றார். அப்போது அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஏராளமானோர் திரண்டு மோடியை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அங்குள்ள காந்தி சிலைக்கு மோடி மலரஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி சக் ஹாகலை சந்திக்க உள்ளார். பின்னர், மேரிலேண்ட் கவர்னரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்பின்னர் வெள்ளை மாளிகை செல்லும் பிரதமர் மோடி, அதிபர் ஒபாமாவை சந்தித்து இருநாட்டு உறவுகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின் முடிவில் இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி