செய்திகள் பிரபல மாடல் அழகி மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு மரணம்!…

பிரபல மாடல் அழகி மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு மரணம்!…

பிரபல மாடல் அழகி மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு மரணம்!… post thumbnail image
மும்பை:-மும்பையில் உள்ள வெர்சோவா என்ற இடத்தில் சுபம் கரோட்டி அபார்ட்மென்டில் 12வது மாடியில் உள்ள பிளாட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் அர்ச்சனா பாண்டே. இவருக்கு வயது 26. மாடல் அழகியான இவர் நிதி ஆலோசகராகவும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் நேற்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

துணை கமிஷனர் சத்ய நாராயண் சவுத்ரி தலைமையில் போலீசார் வந்தனர். அர்ச்சனாவின் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அர்ச்சனா தூக்கில் தொங்கியிருந்தார். இதுகுறித்து துணை கமிஷனர் சத்யநாராயண் சவுத்ரி கூறுகையில், அர்ச்சனா இரண்டு நாள்களுக்கு முன்பே தூக்கு போட்டிருக்க வேண்டும். அவரது உடல் அழுகியதால் துர்நாற்றம் ஏற்பட்டு, அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அர்ச்சனா எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளோம். அதில் அவரது காதலர் உமர் பதான் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார் என்றார்.

மேலும், அர்ச்சனாவின் செல்போன் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அர்ச்சனாவின் சகோதரர் ஒருவர் மோசடி வழக்கில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அபார்ட்மென்டில் மாடல் அழகி தற்கொலை செய்தது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி