செய்திகள்,விளையாட்டு சாம்பியன்ஸ் லீக்: டால்பின்சை வீழ்த்தியது கொல்கத்தா!…

சாம்பியன்ஸ் லீக்: டால்பின்சை வீழ்த்தியது கொல்கத்தா!…

சாம்பியன்ஸ் லீக்: டால்பின்சை வீழ்த்தியது கொல்கத்தா!… post thumbnail image
ஐதராபாத்:-இந்தியாவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் டி.20. கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டால்பின்ஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக உத்தப்பா மற்றும் காம்பீர் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதல் உத்தப்பா டால்பின்ஸ் அணியின் பந்துகளை எல்லைக்கோட்டை நோக்கி விரட்டிக்கொண்டே இருந்தார். ஆனால் மறுமுனையில் காம்பீர் 12 ரன்களுக்கு அவுட்டானார்.

பின்னர் வந்த காலிசும் 6 ரன்னுக்கு நடையை கட்டினார். அடுத்து மணிஷ் பாண்டே உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து டால்பின்ஸ் அணியின் பந்துகளை அடித்து நொறுக்கினர். அதுவும் மணிஷ் பாண்டே சிக்சர் மழையாக பொழிந்து தள்ளினார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். உத்தப்பாவும் தன்பங்குக்கு 85 ரன்கள் குவித்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காத நிலையில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது.வெற்றிக்கு 188 ரன்கள் தேவை என்ற இலக்குடன் டால்பின்ஸ் அணி களமிறங்கியது. வான் விக்கும், டெல்போர்ட்டும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார் டெல்போர்ட். அடுத்து வந்த செட்டியும் 1 ரன்னில் நடையை கட்டினார்.

பின்னர் வந்த ஜார்ஸ்வெல்டும் 19 ரன்னுக்கு நடையை கட்டினார். அடுத்த சில நிமிடங்களில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வான் விக் 34 ரன்னுக்கு அவுட்டானார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த சோண்டோ மற்றும் பெலுக்வாயோ ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லவேண்டும் என்று அவர்கள் எவ்வளவோ முயன்ற போதிலும் சுனில் நரேனின் சிறப்பான பந்துவீச்சு அதை தடுத்தது.இதனால் சோண்டோ 32 ரன்னிலும், பெலுக்வாயோ 37 ரன்னிலும் அவுட்டானார்கள். அடுத்து வந்த வீரர்கள் பேட்டிங்கில் சொதப்ப டால்பின்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற நேர்ந்தது. ஆட்டநாயகனாக கொல்கத்தாவின் ராபின் உத்தப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி