செய்திகள்,திரையுலகம் வாலிபரை கொன்ற வெள்ளைப்புலியை கொல்ல வேண்டாம்: நடிகை திரிஷா வேண்டுகோள்!…

வாலிபரை கொன்ற வெள்ளைப்புலியை கொல்ல வேண்டாம்: நடிகை திரிஷா வேண்டுகோள்!…

வாலிபரை கொன்ற வெள்ளைப்புலியை கொல்ல வேண்டாம்: நடிகை திரிஷா வேண்டுகோள்!… post thumbnail image
சென்னை:-டெல்லி விலங்கியல் பூங்காவில் வாலிபர் ஒருவரை வெள்ளைப் புலி கடித்துக் கொன்றது. புலியை உயரத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருந்த போது தடுப்பு வேலியை தாண்டி திடீரென கீழே தவறி விழுந்து விட்டார். அவரை புலி கடித்து இழுத்து கொன்று விட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வெள்ளைப் புலியை கொன்று விடும்படி டுவிட்டர், பேஸ்புக்கில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் புலியை கொல்லக்கூடாது என்று எதிர்த்து வருகிறார்கள். புலியை கொல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் கடிதம் எழுதுகின்றனர். நடிகை திரிஷாவும் புலியை கொன்று விட வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜிக்கு டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.திரிஷா பிராணிகள் மீது பிரியம் வைத்து உள்ளவர். நாய்களை வளர்த்து தத்து கொடுத்து வருகிறார். விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிலும் பொறுப்பில் இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி