செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!…

எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!…

எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!… post thumbnail image
லகோஸ்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜிரியா, லைபீரியா, கினியா, சியாரா லியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற உயிர் கொல்லி நோய் கடுமையாக பரவி வருகிறது. ‘எபோலா’ என்ற வைரஸ் கிருமிகளால் இந்த நோய் பரவுகிறது.இந்த நோயை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே இது ஒரு பேரழிவு நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

எபோலா நோய்க்கு லைபீரியாதான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1830 பேர் பலியாகி உள்ளனர். அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் மிக குறைவான படுக்கை வசதிகளே உள்ளன.
இதனால் அங்கு போதிய அளவு சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனவே, அமெரிக்கா இங்கு டாக்டர், சுகாதார பணியாளர் உள்பட 3 ஆயிரம் பேரை அனுப்பியுள்ளது.

சியாரா லியோனில் 600 பேர் எபோலாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதே போன்று கினியாவிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நைஜீரியா, சினேசல் நாடுகளிலும் சாவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி