அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு நியூயார்க் கோர்ட் சம்மன்!…

குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு நியூயார்க் கோர்ட் சம்மன்!…

குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு நியூயார்க் கோர்ட் சம்மன்!… post thumbnail image
நியூயார்க்:-குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைகளை காரணம் காட்டி, குஜராத் மாநில முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசு மறுத்து விட்டது.தற்போது, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். இதற்காக, அவர் புது டெல்லியில் இருந்து நேற்று நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் மூலம் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை மோடி புரிந்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டின் மனித உரிமை அமைப்பு ஒன்று 28 பக்க குற்றச்சாட்டுகளுடன் மனுத்தாக்கல் செய்திருந்தது.1789ம் ஆண்டு அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, வெளிநாடுகளில் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக நடந்துக் கொள்பவர்கள் மீது அமெரிக்காவில் வசிப்பவர்கள் அங்குள்ள கோர்ட்டுகளில் வழக்கு தொடர முடியும்.அவ்வகையில், இவ்வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் நேற்று மோடிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மனை பெற்ற 21 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு உத்தரவிட்டுள்ளது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மோடி நாளை உரையாற்றவுள்ள நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக புது டெல்லியில் கருத்து கூறிய மத்திய சட்ட மந்திரி ரவி சங்கர் பிரசாத், இந்த செய்தியை ஊடகம் மூலமாக தான் அறிந்துக் கொண்டேன். அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை ஆய்வு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி