செய்திகள்,திரையுலகம் புதிய படத்துக்கு விஜய்-சூர்யா படத்தின் தலைப்பை வைத்த இயக்குனர்!…

புதிய படத்துக்கு விஜய்-சூர்யா படத்தின் தலைப்பை வைத்த இயக்குனர்!…

புதிய படத்துக்கு விஜய்-சூர்யா படத்தின் தலைப்பை வைத்த இயக்குனர்!… post thumbnail image
சென்னை:-1997ல் வசந்த் இயக்கிய படம் நேருக்கு நேர். இந்த படத்தில் விஜய் நாயகனாக நடித்தார். இன்னொரு நாயகனாக இந்த படத்தில்தான் சூர்யா அறிமுகம் ஆனார். இதில் விஜய்க்கு ஜோடியாக கெளசல்யாவும், சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரனும் நடித்திருந்தனர். அந்த படத்தின் நேருக்கு நேர் என்ற தலைப்பை, ஜீவா படத்திற்கு பிறகு தான் இயக்கும் படத்திற்கு சுசீந்திரன் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாலாஜி சக்திவேலின் வழக்கு எண், மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் நடித்த ஸ்ரீ, இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக சம்ஸ்க்ருதி செனாய் என்ற புதுமுகம் நடிக்கிறாராம். அக்டோபர் 6ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி 30 நாட்களில் டோட்டல் படப்பிடிப்பும் முடிகிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி