செய்திகள்,திரையுலகம் நடிகை ஸ்ருதிஹாசன் பரபரப்பு பேட்டி!…

நடிகை ஸ்ருதிஹாசன் பரபரப்பு பேட்டி!…

நடிகை ஸ்ருதிஹாசன் பரபரப்பு பேட்டி!… post thumbnail image
சென்னை:-சமுதாயத்தில் நிலவும் சம்பிரதாயங்களுக்கு வாழாமல் சுதந்திரமாக தனது எண்ணப்படி முடிவெடுக்கும் குணம் கொண்டவர் நடிகர் கமல். பாலிவுட் ஹீரோயின் சரிகா திருமணத்துக்கு முன் கர்ப்பம் ஆனார். தன் குழந்தைக்கு தந்தை கமல் என்று அவர் அறிவித்தார். அதை கமல் ஏற்றுக்கொண்டார். பின்னர் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். ஸ்ருதி ஹாசன், அக்ஷரா என இரண்டு குழந்தைகள் பெற்றார்.

தற்போது கமல்-சரிகா மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்று வாழ்கின்றனர். ஸ்ருதி தனியாக வசிக்கிறார். அக்ஷரா தாய் சரிகாவுடன் வசிக்கிறார்.தனது திருமணம் பற்றி ஸ்ருதி கூறியது: தம்பதிகளாக பார்க்கும்போது எனது அம்மா, அப்பாதான் மிக அழகான ஜோடி. அவர்களுக்குள் நிறைய அன்பும் அரவணைப்பும் இருந்தது. அந்த நாட்களில் அவர்களுடன் இணைந்து வாழ்ந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. நானும் கூட திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். அதன்பிறகு திருமணம் செய்வேன்.இவ்வாறு ஸ்ருதி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி