அரசியல்,செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது மங்கள்யான் வெற்றி – பிரதமர் மோடி பாராட்டு!…

கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது மங்கள்யான் வெற்றி – பிரதமர் மோடி பாராட்டு!…

கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது மங்கள்யான் வெற்றி – பிரதமர் மோடி பாராட்டு!… post thumbnail image
பெங்களூர்:-மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தார். இந்த வரலாற்று சாதனை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:–

1. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியதன் மூலம் இந்தியா வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

2.நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. இந்த சமயத்தில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்களகரமான நிகழ்வு நடந்து இருக்கிறது. தண்ணீரில் குதிக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. துணிந்து நாம் மேற்கொள்ளும் முயற்சி நமக்கு வெற்றியை தேடித்தரும்.

3.கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அதை இந்த தேசமே மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும். கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு பெரிய சாதனையை நமது விஞ்ஞானிகள் நிகழ்த்தி இருக்கிறார்கள்.

4. மங்கள்யான் வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும். சாதனை நிகழ்த்தியுள்ள நமது விஞ்ஞானிகளை கவுரவிக்கும் வகையில் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவ– மாணவிகள் தொடர்ந்து 5 நிமிடங்கள் கரவொலி எழுப்ப வேண்டும்.

5.வாஜ்பாய் கண்ட கனவு, சந்திரனை பற்றிய ஆராய்ச்சிக்கு உந்துசக்தியாக அமைந்தது. தற்போது வெற்றி அடைந்த சந்திரயான் திட்டம் நம்மை செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு வழிநடத்தி இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி