அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மங்கள்யான் வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

மங்கள்யான் வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

மங்கள்யான் வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!… post thumbnail image
பெங்களூர்:-மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார்.முதல் முயற்சியிலேயே மங்கயான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.பெங்களூர் இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது மங்கள்யான் விண்கலம். அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம்.மங்கள்யான் விண்கல பயணம் வெற்றி அடையும் என்ற முழு நம்பிக்கை இருந்தது. விண்வெளியில் இந்திய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். சாதிக்க முடியாததை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர்.

முதல் முயற்சியிலேயே வெற்றி எட்டப்பட்டிருக்கிறது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடு இந்தியா.அமெரிக்காவை விட இந்திய விஞ்ஞானிகள் குறைந்த செலவில் இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். வருங்கால சந்ததியினருக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிகாட்டி இருக்கிறார்கள். முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள் என்று பிரதமர் மோடி பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி