செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு சமூக பணிகளில் ஈடுபட சச்சின் தெண்டுல்கர் விருப்பம்!…

சமூக பணிகளில் ஈடுபட சச்சின் தெண்டுல்கர் விருப்பம்!…

சமூக பணிகளில் ஈடுபட சச்சின் தெண்டுல்கர் விருப்பம்!… post thumbnail image
மும்பை:-நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். குறிப்பாக தொண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

நேற்று முன் தினம் புனேயில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் தெண்டுல்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
என் வாழ்க்கையின் முதல் இன்னிங்ஸ் பரபரப்பு, திகில் மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. அடுத்து என் வாழ்க்கையின் 2–வது இன்னிங்சில் சமூக பணிகளில் ஈடுபட விரும்புகிறேன்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இதற்காக என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். நான் என்ன தான் வேலை செய்தாலும் எனக்கு உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி