அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும்!… மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல்…

கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும்!… மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல்…

கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும்!… மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல்… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலின் போது, நரேந்திர மோடி மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் தங்களது கனவு திட்டமான கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் என்று உறுதி அளித்தார். பின்னர், மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைத்த பின்பு இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீதான விசாரணையில் கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதைப் பார்த்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மத்திய அரசின் திட்டத்தைப் பார்த்தால் 200 ஆண்டுகள் ஆனாலும் கங்கையை சுத்தப்படுத்த முடியாது போல் தெரிகிறது என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து படிப்படியான செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும் படியும் அப்போது கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு, கங்கை நதியை சுத்தப்படுத்துவது தொடர்பாக படிப்படியான செயல்திட்டம் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், 2,500 கி.மீ. நீள கங்கையை 3 கட்டங்களாக சுத்தப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், முதல் கட்டத்துக்கு 3 ஆண்டுகளும், 2-வது கட்டத்துக்கு 5 ஆண்டுகளும், 3-வது கட்டத்துக்கு 10 ஆண்டுகளும் ஆகும் என்று எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி