செய்திகள்,திரையுலகம் பாராட்டு மழையில் நனையும் நடிகை ஹன்சிகா!…

பாராட்டு மழையில் நனையும் நடிகை ஹன்சிகா!…

பாராட்டு மழையில் நனையும் நடிகை ஹன்சிகா!… post thumbnail image
சென்னை:-சந்திரமுகி பாணியில் அரண்மனை என்ற படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என்று செய்திகள் வெளியானபோது, சந்திரமுகியில் ஜோதிகா நடித்தது போன்ற ஒரு அதிரடியான வேடத்தில் ஹன்சிகா நடிப்பதாக கூறினார்கள். அதையடுத்து ஹன்சிகாவிடம் அந்த வேடம் குறித்து கேட்கப்பட்டபோது, என் கேரியரில் அரண்மனை முக்கியமான படமாக இருக்கும் என்று கூறினார்.

இதனால் அரண்மனையில் ஹன்சிகாவின் நடிப்பு மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதோடு ஹன்சிகாவும் மிகுந்த எதிர்பார்ப்புடன் அரண்மனையை எதிர்பார்த்திருந்தார்.படம் ரிலீசானதை அடுத்து, அவரது நடிப்பைப்பார்த்து விட்டு சில திரையுலக நண்பர்கள் போன் போட்டு, படத்தில் குறைவான நேரமே வந்தாலும் மனதில் ஒட்டிக்கொள்ளும் நடிப்பு. காதல், செண்டிமென்ட் என்று பர்பாமென்ஸ் ரீதியாக கலக்கியிருக்கிறீர்கள் என்று ஆளாளுக்கு ஹன்சிகாவை மாறி மாறி புகழந்து தள்ளி வருகிறார்களாம்.

இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருந்தும் இந்த அளவுக்கு ஹன்சிகாவின் நடிப்பை யாரும் பாராட்டியதில்லையாம். அதனால் அரண்மனை தந்த இந்த பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஹன்சிகா, இந்த படத்தில் நான் நடித்துள்ள செல்வி என்ற கிராமத்து பெண் வேடத்தில் நடித்தபோது அதிக டயம் எடுத்துக்கொண்டு நடித்தேன். காதல், செண்டிமென்ட், பக்தி, பேய் என பல விசயங்கள் அடங்கிய கிராமத்து பெண் கதாபாத்திரம் என்பதால் அதை உணர்ந்து நடிக்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் ஒரே கேரக்டரில் பலவிதமான ரியாக்சனை கொடுத்தேன்.இப்படம் எனது திறமைக்கு ஒரு நல்ல சான்றாகி விட்டது. அதனால் இனிமேல் இதுபோன்ற அழுத்தமான கதாபாத்திரங்களில் அதிகமாக நடிப்பேன் என்று கூறியுள்ளார் ஹன்சிகா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி