செய்திகள்,திரையுலகம் நடிகை ஹரிப்ரியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!…

நடிகை ஹரிப்ரியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!…

நடிகை ஹரிப்ரியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!… post thumbnail image
சென்னை:-தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, வராயோ வெண்ணிலாவே, முரண் படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ஹரிப்ரியா. கன்னடத்தில் இப்போது பிசியான நடிகை.பிளை என்ற கன்னடப் படத்தில் நடிக்க 6 லட்சம் சம்பளம் பேசப்பட்டு அதில் 2 லட்சத்தை முன்பணமாக பெற்றிருந்தார். பல்வேறு காரணமாக பிளை படம் தொடங்கப்படாமல் தாமதமாகிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் கன்னட நடிகர் சுதீப்புடன் ஒரு படத்தில் நடிக்கச் சென்று விட்டார். பிளை படம் தொடங்கப்பட்டபோது ஹரிப்ரியா சுதீப்புடன் நடித்துக் கொண்டிருந்தார். இதனால் பிளை படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் பிளை பட தயாரிப்பாளர், நிதி சுப்பையாவை வைத்து படத்தை ஆரம்பித்து விட்டார். ஹரிப்ரியாவிடம் கொடுத்த அட்வான்ஸ் 2 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார். அவரோ உங்கள் படத்துக்கு நான் கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கி விட்டீர்கள். என் மீது எந்த தவறும் இல்லை. அதனால் பணத்தை திருப்பித் தரமுடியாது என்ற மறுத்துவிட்டார். இதனால் தயாரிப்பாளர், கன்னட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி