செய்திகள்,திரையுலகம் காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு நடிகை சுருதிஹாசன் நிதி உதவி!…

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு நடிகை சுருதிஹாசன் நிதி உதவி!…

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு நடிகை சுருதிஹாசன் நிதி உதவி!… post thumbnail image
சென்னை:-காஷ்மீர் வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது. இதற்கு நன்கொடைகள் வழங்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்று இந்தி நடிகர்கள் சல்மான்கான், அபிஷேக் பச்சன், ஹிருத்திக் ரோஷன், குணால் கபூர், சோனாக்சி சின்ஹா உள்ளிட்டோர் நிதி உதவி அளித்துள்ளனர்.

இவர்களுடன் நடிகை சுருதிஹாசனும் சேர்ந்துள்ளார். வெள்ள நிவாரண நிதியாக பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளார். மாணவர்களும் சமூக இயக்கங்களும் இதில் பங்கெடுத்து நிதிஉதவிகள் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.சுருதிஹாசன் பிசியான நடிகையாகியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கிறார். அழகும் புத்திசாலித்தனமும் சுருதிஹாசனிடம் நிறைய இருக்கிறது என்று திரையுலகத்தினர் புகழ்கிறார்கள்.

இது குறித்து சுருதிஹாசன் கூறும் போது, அழகு மட்டும் இருந்தால் போதாது அறிவும் வேண்டும். அறிவு இல்லாத அழகு பயனற்றது. அழகால் மற்றவர்களை கவரலாம். ஆனால் வாழ்க்கையில் நல்ல முடிவுகள் எடுப்பதற்கு புத்திசாலித்தனம் வேண்டும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி