அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு!…

பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு!…

பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு!… post thumbnail image
புது டெல்லி:-பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ சாப்ட்’ அதிபரும், உலகின் பெரும் கோடீஸ்வரரும், இலவச போலியோ சொட்டு மருந்து உள்ளிட்ட பல்வேறு தர்ம காரியங்களை முன்னெடுத்து செய்துவரும் தொண்டு நிறுவனமான ‘மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்’ அறக்கட்டளையின் நிறுவனத் தலைவருமான பில் கேட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்தார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் கட்டாய வங்கிக் கணக்கு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்திவரும் பிரதமர் மோடியை பெரிதும் பாராட்டிய பில்கேட்ஸ், தூய்மையான இந்தியா என்ற பெயரில் மோடி அறிவித்திருக்கும் சுகாதார இயக்கத்தையும் வெகுவாக புகழ்ந்தார்.மோடி அரசின் புதிய நோய்த் தடுப்பு திட்டத்தின்படி, நோய்களுக்கு எதிரான இலவச தடுப்பூசி, இலவச சொட்டு மருந்து ஆகிய துறைகளில் எப்போதும் போல் ‘மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்’ தனது பங்களிப்பை வழங்கும் என பில்கேட்சும், அவருடன் பிரதமரை சந்தித்த அவரது மனைவி மெலிண்டா பில்கேட்சும் உறுதியளித்தனர்.

உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் தங்களது அறக்கட்டளையின் மூலமாக இந்திய மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்துவரும் பில்கேட்ஸ் தம்பதியரை பிரதமர் மோடி பாராட்டிப் புகழ்ந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி