செய்திகள்,திரையுலகம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியங்கா!…

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியங்கா!…

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியங்கா!… post thumbnail image
மும்பை:-ஓமங் குமார் இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்துள்ள படம் ‘மேரி கோம்’. இந்த படத்திற்கு ரசிகர்கள் தரப்பிலும், விமர்சகர்கள் தரப்பிலும் பாராட்டியும், எதிர்ப்பாகவும் பல விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அவற்றில், வடகிழக்கு மாநிலங்களில் நடிப்பு திறமை மிக்க பலர் இருந்தும் அவர்களை இந்த படத்தில் பயன்படுத்தவில்லை எனவும், மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகள் படமாக்கப்படவில்லை எனவும் பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வடகிழக்கு மாநில மக்களின் நடிப்பை பயன்படுத்தவில்லை என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா, இந்த படத்திற்கு உண்மையான தோற்றத்தை கொடுக்க வேண்டும் என்றே நாங்கள் நினைத்தோம். அதன் ஒரு முயற்சியாகவே வடகிழக்கு பகுதிகள் மற்றும் நேபாளத்தை சேர்ந்த மக்களை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளோம். படத்தில் எனக்கு கோச்சாக வருபவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். இது மேரியை பற்றிய கதை என்பதால் வடகிழக்கு பகுதி மக்களின் நடிப்பிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஒரு சிலரை தவிர யாரும் வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நடிக்க வரவில்லை. இருண்ட பகுதியாக இருக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியாகவும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் வடகிழக்கு பகுதி மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்ற விமர்சனத்தை என்னால் ஏற்க முடியாது. அது தவறானதும் கூட என தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி