செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்தின் கதை!…

‘ஐ’ படத்தின் கதை!…

‘ஐ’ படத்தின் கதை!… post thumbnail image
பல கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள, ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. ஹாலிவுட் நடிகர் அர்னால்டை இந்த விழாவுக்கு அழைத்து வந்தது, பாலிவுட்காரர்களை வாய் பிளக்க வைத்து விட்டது. இதனால், இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும்’ என்பது தான், தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

இதுகுறித்து விசாரித்தபோது, மாடலிங் உலகை மையமாக வைத்துத் தான், இந்த படத்தின் கதை புனையப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாடலிங் உலகில் உள்ளவர்களின் உழைப்பு, அவர்கள் படும் வேதனைதான், ‘ஐ’ படத்தின் மையப் புள்ளியாம். இதனால், கதைக்கேற்ற வகையில், தன்னை உருமாற்றி, உடலை வருத்தி, கடுமையாக உழைத்து நடித்துள்ளாராம், விக்ரம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி