செய்திகள்,திரையுலகம் கத்தி பாடலுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் சிம்பு!…

கத்தி பாடலுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் சிம்பு!…

கத்தி பாடலுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் சிம்பு!… post thumbnail image
சென்னை:-கத்தி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. அனிருத்தும் சிம்புவும் நண்பர்கள் என்ற வகையில் கத்தி படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்பே சிம்புவிற்கு போட்டுக் காட்டியுள்ளார் அனிருத். பாடல்களைக் கேட்டுவிட்டு அனிருத்தை வெகுவாகப் பாராட்டிய சிம்பு, தன்னுடைய பாராட்டு வெளி உலகத்துக்கும் தெரியட்டுமே என்ற நல்லெண்ணத்தில் அதை ட்வீட் பண்ணி இருக்கிறார்.

மற்றொரு ட்வீட்டில் அனிருத்… உன்ன நினைச்சா சந்தோஷமா இருக்குடா… எல்லா பாட்டும் சூப்பரா இருக்கு… குறிப்பா செஃல்பி புள்ள… சூப்பர்!. வாழ்த்துகள். என்றும் வாசித்திருக்கிறார். அனிருத்தை மட்டுமல்ல, கத்தி படத்தின் நாயகனான விஜய்யை குறிப்பிட்டு, தலைவா விஜய்… தல ஃபேன்தான்… ஆனா தலைக்கனம் இல்லாத ஃபேன். என்றும் ட்வீட் பண்ணி இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி