செய்திகள்,திரையுலகம் எதிர்ப்பை மீறி கத்தி படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு!…

எதிர்ப்பை மீறி கத்தி படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு!…

எதிர்ப்பை மீறி கத்தி படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு!… post thumbnail image
சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ் சரன் அல்லி ராஜா தயாரிக்கிறார்.இவர் லைக்கா என்ற செல்போன் நிறுவனத்தையும் நடத்துகிறார்.சுபாஷ்கரன் அல்லி ராஜா இலங்கை தமிழர் ஆவார். இவருக்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருப்பதாக சில தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டி போராட்டத்தில் குதித்தன. ‘கத்தி’ படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் எதிர்த்தனர்.

ராஜபக்சேவுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பட அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா மறுத்தார். அவர் கூறும்போது, நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். பல்வேறு நாடுகளில் தொழில் செய்து சம்பாதிக்கிறேன். தொண்டு நிறுவனங்கள் மூலம் நலிந்த ஏழைகளுக்கு உதவிகளும் செய்து வருகிறேன். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி இருக்கிறேன்.
ராஜபச்சே பணம் கொடுத்து என் மூலம் ‘கத்தி’ படத்தை தயாரிக்கிறார் என்று அவதூறு பரப்பப்பட்டு உள்ளது. எங்கள் நிறவனத்தையும், ராஜபக்சேவையும் இணைத்து போலி படங்களை தயார் செய்து இன்டர்நெட்டில் விஷமிகள் பரவவிட்டுள்ளனர்.

ஏற்கனவே ‘பிரிவோம் சந்திப்போம்’ படம் எடுத்தோம். இப்போது ‘கத்தி’ படம் தயாரிக்கிறோம். தொடர்ந்து படங்கள் தயாரிக்க ஆசை. வெளிநாட்டு தமிழர்களிடம் எங்கள் மீது நன் மதிப்பு உள்ளது வணிக ரீதியாகவும் விளம்பரம் தேடவுமே எதிர்ப்புகள் கிளப்பப்பட்டு உள்ளன.‘கத்தி’ பட பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு படம் ரிலீசாகும். நாளை பாடல்கள் வெளியீடப்படும் என்றார்.
எதிர்ப்பாளர்கள் நாளை பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தில் முற்றுகையிடப் போவதாக அறிவித்து உள்ளனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி