செய்திகள்,திரையுலகம் நடிகை திரிஷா நடித்த கன்னடப் படம் 50 கோடி வசூலாகுமா!…

நடிகை திரிஷா நடித்த கன்னடப் படம் 50 கோடி வசூலாகுமா!…

நடிகை திரிஷா நடித்த கன்னடப் படம் 50 கோடி வசூலாகுமா!… post thumbnail image
சென்னை:-கன்னடத் திரையுலகின் 80 வருட கால சாதனையை திரிஷா அறிமுகமாகியுள்ள கன்னடப் படமான ‘பவர்’ முறியடிக்கும் என சான்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இந்தப் படம் வெளியான முதல் வாரத்திலேயே சுமார் 20 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. படம் வெளிவந்து இரண்டு வாரங்களுக்குள் இந்தப் படத்தின் வசூல் 30 கோடியைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.

சமீப காலத்தில் கன்னடப் படங்களின் வெற்றியும் பல கோடிகளில் புரள ஆரம்பித்து விட்டது. ‘நான் ஈ’ சுதீப், சரத்குமாரின் மகளான வரலட்சுமி நடித்த ‘மானக்யா’ என்ற கன்னடப் படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து சுமார் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாம். அந்தப் படத்தின் வசூலை ‘பவர்’ படம் ஏற்கெனவே முறியடித்து விட்டதாகவும், மொத்தமாக இந்தப் படத்தின் வசூல் 50 கோடியைத் தொட்டு விடும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி