செய்திகள்,திரையுலகம் தனி விமானத்தில் நடிகர் அர்னால்டு நாளை சென்னை வருகை!…

தனி விமானத்தில் நடிகர் அர்னால்டு நாளை சென்னை வருகை!…

தனி விமானத்தில் நடிகர் அர்னால்டு நாளை சென்னை வருகை!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடிக்கும் ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் மாலை நடக்கிறது.இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொள்கிறார். ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட நடிகர் புனித்ராஜ்குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

விழாவில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் விக்ரம், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடனம் ஆடுகின்றனர்.15 ஆயிரம் பேர் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.விழாவில் பங்கேற்க அர்னால்டு ஹாங்காங்கில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நாளை காலை சென்னை வந்து சேர்கிறார்.

அவருடன் 8 பேர் குழுவினர் வருகிறார்கள். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.அர்னால்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி