செய்திகள் சிகரெட் வாங்கிவர மறுத்த சிறுவனை குத்திக் கொன்ற இருவர் கைது!…

சிகரெட் வாங்கிவர மறுத்த சிறுவனை குத்திக் கொன்ற இருவர் கைது!…

சிகரெட் வாங்கிவர மறுத்த சிறுவனை குத்திக் கொன்ற இருவர் கைது!… post thumbnail image
புது டெல்லி:-வடகிழக்கு டெல்லியில் உள்ள வஸிப்பூர் பகுதியை சேர்ந்த இரு சிறுவர்கள் அங்குள்ள ஜெ.ஜெ.காலனி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த 4 பேர் சிறுவர்களை அழைத்தனர்.

அருகில் சென்ற சிறுவர்களிடம் பணத்தை தந்து, பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் இருந்து சிகரெட் பாக்கெட் வாங்கிவரும்படி அந்த போதை பேர்வழிகள் கூறினர்.இதற்கு மறுத்துவிட்ட சிறுவர்களை கம்பால் அடித்த அவர்களிடம் இருந்து தப்பியோடியவர்களை விரட்டிக் கொண்டு ஓடிய அந்த கும்பல் ரஞ்சன்(14) என்பவனை பிடித்து, கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியது.

ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த ரஞ்சனை அப்பகுதியில் இருந்தவர்கள் தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.இந்த கொடூர சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளில் இருவரை கைது செய்த டெல்லி போலீசார், தலைமறைவாக இருக்கும் மேலும் இருவரை தேடிவருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி