செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் துப்பாக்கி சுடும் வீரரான ககன் நரங்!…

ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் துப்பாக்கி சுடும் வீரரான ககன் நரங்!…

ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் துப்பாக்கி சுடும் வீரரான ககன் நரங்!… post thumbnail image
கிரானடா:-ஸ்பெயின் நாட்டின் கிரானடா நகரில் 51-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ககன் நரங் 50 மீட்டர் ரைபிள் பிரான் பிரிவில் பங்கேற்றார். மொத்தம் 124.2 புள்ளிகளைப் பெற்று 6-ம் இடத்திற்குத் தள்ளப்பட்ட ககன் நரங், ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார். முதல் 5 இடங்களைப் பிடித்த வீரர்கள் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

மற்றொரு இந்திய வீரர் ஹரியோம் சிங், தகுதிச்சுற்றில் 45-வது இடத்தைப் பிடித்ததால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்றில் பிரகாஷ் நஞ்சப்பா 9-வது இடத்தையும், ஜிது ராய் 10-வது இடத்தையும் பிடித்ததால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவும் தகுதிச்சுற்றைத் தாண்டவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி