செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்தியா–வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணங்கள் அதிகரிப்பு!… யூனிசெப் தகவல்…

இந்தியா–வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணங்கள் அதிகரிப்பு!… யூனிசெப் தகவல்…

இந்தியா–வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணங்கள் அதிகரிப்பு!… யூனிசெப் தகவல்… post thumbnail image
நியூயார்க்:-ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் தெற்கு ஆசிய நாடுகளில் 18 வயதுக்கு முன்பே பெரும்பாலான சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது.அது 46 சதவீதமாகும், அவர்களில் 18 சதவீதம் பேர் 15 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள். இங்கு மூன்றில் 2 பங்கு சிறுமிகளுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடைபெறுகிறது.

அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவும், நேபாளமும் உள்ளன. இது போன்ற திருமணங்களுக்கு அடிப்படை காரணமாக வறுமை, மற்றும் சமூக கோட்பாடுகள் திகழ்கின்றன.இவற்றுக்கு பயந்தே தங்கள் பெண் குழந்தைகளை மிக குறைந்த வயதிலேயே பெற்றோர் திருமணம் செய்து கொடுக்கின்றனர். அதற்கு தீர்வு பெண்களுக்கு கல்வி அறிவு அளிப்பது மிக அவசியமாகும்.அதன் மூலம் அவர்கள் படித்த பின் வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பதே முக்கிய தீர்வாகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆசிய நாடுகளில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குழந்தை பிறப்பை பதிவு செய்துள்ளனர். அதே வேளையில் கடந்த 25 ஆண்டுகளில் 10 கோடி குழந்தைகள் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை. மேலும் இப்பகுதியில் இந்த கால கட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே இறந்துள்ளனர் என்ற தகவலையும் யூனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி