செய்திகள்,திரையுலகம் சர்ரென சம்பளத்தை உயர்த்திய இசையமைப்பாளர் அனிருத்!…

சர்ரென சம்பளத்தை உயர்த்திய இசையமைப்பாளர் அனிருத்!…

சர்ரென சம்பளத்தை உயர்த்திய இசையமைப்பாளர் அனிருத்!… post thumbnail image
சென்னை:-‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்திற்கு அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலகப் புகழ் பெற்று அவரை இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்த்துவிட்டது. இதுவரை 3, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் முழுமையாகவும், ‘இரண்டாம் உலகம்’ படத்தில் இரண்டு பாடல்களுக்கும், பின்னணி இசையும், ‘டேவிட்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கும் இசையமைத்திருக்கிறார்.

இவற்றில் மூன்று படங்கள் மட்டுமே வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. இருந்தாலும் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அனிருத், ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது சம்பளத்தை திடீரென இரண்டு கோடி ரூபாய் வரை உயர்த்திவிட்டாராம். தற்போது இசையமைத்து வரும் ‘கத்தி, ஆகோ, காக்கிச் சட்டை, நானும் ரவுடிதான்படங்களுக்கெல்லாம் அதே பழைய சம்பளம்தானாம். இனி, யாராவது இசையமைக்கக் கேட்டால் அவருடைய சம்பளம் இரண்டு கோடி ரூபாயாம். ‘என்றென்றும் புன்னகை’ அகமது இயக்கத்தில் உதயநிதி படத்திற்கும் முதலில் இரண்டு கோடி ரூபாய்தான் கேட்டிருக்கிறார். பின்னர் இறங்கி வந்து இருபத்தைந்து லட்சத்தை மட்டும் குறைத்துக் கொண்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி