செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இலங்கை கிரிக்கெட் வீரர் தில்சானை மதம் மாற பாக். வீரர் வற்புறுத்தினாரா?… விசாரணைக்கு உத்தரவு…

இலங்கை கிரிக்கெட் வீரர் தில்சானை மதம் மாற பாக். வீரர் வற்புறுத்தினாரா?… விசாரணைக்கு உத்தரவு…

இலங்கை கிரிக்கெட் வீரர் தில்சானை மதம் மாற பாக். வீரர் வற்புறுத்தினாரா?… விசாரணைக்கு உத்தரவு… post thumbnail image
இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் மோதிய 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த போட்டி முடிந்தது பெலிலியன் திரும்பியபோது இலங்கை வீரர் தில்சானிடம் பாகிஸ்தான் வீரர் அகமது ஷேஜாத் இஸ்லாம் மதம் பற்றி பேசியுள்ளார். மதம் மாறுமாறு அவர் தில்சானிடம் கேட்டுக்கொண்டதாக கேமிராவில் பதிவாகி இருந்தது.

முஸ்லிம் அல்லாத நீங்கள் முஸ்லிமாக மாறிவிட்டால், வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. நேராக சொர்க்கம்தான் என்று ஷேஜாத் கூறியதாக தெரிகிறது. இதற்கு தில்சான் என்ன பதில் கூறினார் என்பது சரியாக கேட்கவில்லை.தில்சானிடம் இஸ்லாமிய மதம் பற்றி அகமத் ஷேஜாத் கூறியது என்ன என்பது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

இதுபற்றி ஷேஜாத் கூறும்போது, நானும், தில்சானும் தனிப்பட்ட முறையில்தான் பேசினோம் என்றார்.இதுகுறித்து பாகிஸ்தான் மீடியா மேலளார் அக்பர் கூறும்போது, தில்சானுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாக ஷேஜாத் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தார். இதனால் இதில் சொல்லுவதற்கு மேலும் ஒன்றும் இல்லை என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி