செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் சீனாவில் கடும் மழை: நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு!…

சீனாவில் கடும் மழை: நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு!…

சீனாவில் கடும் மழை: நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு!… post thumbnail image
பீஜிங்:-தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் நகரில் கடந்த சில தினங்களாக புயலுடன் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 11 சுரங்க தொழிலாளர்கள் உள்பட 24 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் 500-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

யுன்யாங் கவுண்டியில் 9 நகரங்கள் மழை வெள்ளத்தால் பெரும்பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. அங்கிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்பு படையினர், போலீசார், தீயணைப்பு படையினர் மீட்டு, பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்தனர்.இதே போல், யுங்யாங், வூகி, பென்ஜி மற்றும் வுஷான் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் மின்வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
உக்ஸி பகுதியில் உள்ள 32 நகரியங்களில் 2½ லட்சம் பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி