அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஜப்பானில் டிரம்ஸ் வாசி்த்த பிரதமர் மோடி!…

ஜப்பானில் டிரம்ஸ் வாசி்த்த பிரதமர் மோடி!…

ஜப்பானில் டிரம்ஸ் வாசி்த்த பிரதமர் மோடி!… post thumbnail image
டோக்கியோ:-ஜப்பானில் சுற்றுப் பயணம் செய்து வரும் பிரதமர் மோடி டோக்கியோவில் உள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் தொழில்நுட்பம் மற்றும் கலாசார அகாடமி தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.அந்த விழாவில் ஜப்பானை சேர்ந்த வர்த்தகர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். விழாவில் நரேந்திர மோடி மிகவும் உற்சாகமாகவும், குதூகலமாகவும் காணப்பட்டார்.

விழாவில் ஜப்பானின் பாரம்பரிய ‘டெய்கோ டிரம்ஸ்’ இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் டிரம்ஸ் கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்கள் வாசித்து முடித்ததும் பிரதமர் மோடியை டி.சி.எஸ். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்.சந்திரசேகரன் டிரம்ஸ் வாசிக்க அழைத்தார்.அதற்கான குறிப்புகளும் இருந்தன. உற்சாகமாக சென்ற மோடி மிக வேகமாக டிரம்ஸ் வாசித்தார். அப்போது அவர்கள் கொடுத்த குறிப்புகளை பார்க்காமல் சொந்தமாகவே வாசித்தார். அவருடன் ஆண் கலைஞரும் சேர்ந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சி வீடியோ கான்பரன்சிங் மூலமும் நேரடியாக ஒளி பரப்பப்பட்டன. ‘டிரம்ஸ்’ வாசித்து முடித்த பின் அவரை அங்கு கூடியிருந்த வர்த்தகர்களும், பார்வையாளர்களும் கைதட்டி பாராட்டினர்.

முன்னதாக விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது, டி.சி.எஸ். நிறுவனம் 8 வாரங்கள் வகுப்பறையிலும், 6 மாதங்கள் இந்தியாவின் பல இடங்களிலும் திட்ட பணியில் பயிற்சி அளிக்கிறது.
எனவே ஜப்பான் இளைஞர்கள் வகுப்பறைகளில் முடங்கி கிடக்க வேண்டாம். ஒவ்வொரு வார இறுதியிலும் வெளியே சென்று பணத்தை செலவு செய்யுங்கள் என்றார்.முன்னதாக ‘சேக்ரட் ஹார்ட்’ பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி