செய்திகள்,திரையுலகம் லிங்கா படப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: படக்குழுவினர் தவிப்பு!…

லிங்கா படப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: படக்குழுவினர் தவிப்பு!…

லிங்கா படப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: படக்குழுவினர் தவிப்பு!… post thumbnail image
சென்னை:-ரஜினி நடித்துவரும் ‘லிங்கா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தினர். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நடந்து வருகிறது. அங்குள்ள ஜாக் நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

இதற்காக படக்குழுவினர் சாமியானா பந்தலில் கொட்டகைகள் அமைத்து அங்கு முகாமிட்டுள்ளனர். துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என முவாயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு இருக்கிறார்கள்.டிசம்பர் 12ம் தேதி தனது பிறந்த நாளில் ‘லிங்கா’ படம் ரிலீசாகும் என ரஜினி அறிவித்து உள்ளார். எனவே படப்பிடிப்பை டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் முழு வீச்சில் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ‘லிங்கா’ படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அப்பகுதி சேறும் சகதியுமாகிவிட்டது. இதனால் படப்பிடிப்பு சாதனங்களை தூக்கி செல்ல முடியாமல் படக்குழுவினர் சிரமப்படுகின்றனர்.ஆனாலும் திட்டமிட்டபடி படத்தை முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்தி வருகின்றனர். ஓரிரு வாரத்தில் முழு படத்தையும் முடித்து விட்டு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி