செய்திகள் குழந்தை வரம் வேண்டி வந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற 3 மந்திரவாதிகள் கைது!…

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற 3 மந்திரவாதிகள் கைது!…

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற 3 மந்திரவாதிகள் கைது!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண், திருமணமாகி ஏழாண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மனமுடைந்துப் போனார்.தனது மன உளைச்சலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த அந்தப் பெண் டெல்லியின் மோகன் நகர் பகுதியில் உள்ள மாந்தரீக நிலையத்திற்கு சென்று அங்குள்ள மந்திரவாதியிடம் தனது மனக்குறையை கூறினார்.

இதைப்போன்ற இரண்டு கன்சல்டேஷன்களின்போது ஆயிரக்கணக்கான ரூபாயை அவரிடம் கறந்துக் கொண்ட தலைமை மந்திரவாதி, அமானுஷ்ய சக்தியை வரவழைத்து, அதன் மூலம் குழந்தை வரத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறி, அதற்கான நல்ல நாளை குறித்துத் தந்தனுப்பினார்.அந்த சுபமுகூர்த்த சுபதினமான நேற்று முன்தினம் அந்த மாந்தரீக நிலையத்துக்கு சென்றபோது, அந்தப் பெண்ணை மயக்கிய தலைமை மந்திரவாதி, தனது சிஷ்ய மந்திரவாதிகள் இருவருடன் சேர்ந்து கற்பழிக்க முயன்றுள்ளார்.

அவர்களது பிடியில் இருந்து விடுபட்டு ஓடிவந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து அமானுஷ்ய சக்தியுடன் இருந்த 3 மந்திரவாதிகளையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி