செய்திகள்,திரையுலகம் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சரண்யா!…

ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சரண்யா!…

ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சரண்யா!… post thumbnail image
சென்னை:-மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. அதன், பின் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து பின்னர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்து சர்ரென உச்சத்திற்குப் போனார்.

‘தென் மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார். ஏறக்குறைய இன்றைய இளம் நடிகர்கள் அனைவருக்குமே அம்மாவா நடித்து விட்டார். நாயகியாக நடித்ததை விட தற்போது ரொம்பவே பிஸியாக இருக்கிறார் சரண்யா. சமீபத்திய பேட்டி ஒன்றில் இன்னும் நடிக்காத நடிகர்களைப் பற்றி அவர் பேசினார். அப்போது நான் ரஜினிகாந்துடனும், மோகன்லாலுடனும் ஜோடியாக நடிப்பேனே தவிர அவர்களுக்கு அம்மாவாக நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.

எனக்கு சிறு வயதிலிருந்தே ரஜினிகாந்த் என்றால் ரொம்ப பிடிக்கும். என்னுடைய அம்மா தீவிரமான கமல் ரசிகை. நான் சின்னப் பெண்ணாக இருந்த போது சினிமாவுக்குப் போக வேண்டுமென்றால் கூட கமல் படத்திற்குத்தான் முதலில் கூட்டிச் செல்வார். அப்புறம்தான் ரஜினி படத்திற்கே கூட்டிச் செல்வார். ரஜினியுடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி