செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி!…

‘ஐ’ படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி!…

‘ஐ’ படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி!… post thumbnail image
சென்னை:-ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்தினின் தம்பியும், அப்படத்தை இணைந்து தயாரித்து வரும் ரமேஷ் பாபு சமீபத்தில் அமெரிக்கா சென்றார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அர்னால்டின் வீட்டிற்குச் சென்று ஐ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அவரை முறைப்படி நேரில் அழைத்தார். ரமேஷ் பாபுவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஐ பட விழாவில் கலந்துகொள்வதாக உறுதி அளித்துள்ளார் அர்னால்டு.

அர்னால்டின் வருகையை உறுதி செய்யும் விதமாக ரமேஷ் பாபு அமெரிக்காவில் அர்னால்டுடன் எடுத்துக் கொண்ட புடைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதோடு, ஆஸ்கார் ஃபிலிம்ஸின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். ஐ படத்தின் தெலுங்கு பதிப்பின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இன்னொரு ஹாலிவுட் பிரபலமான ஜாக்கிசான் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். அர்னால்டு, ஜாக்கிசான் வருகையைத் தொடர்ந்து ஐ படத்தைப் பற்றி எதிர்பார்ப்பு எகிறி வரும் அதே நேரத்தில் இன்னொரு முணுமுணுப்பும் கேட்கிறது படத்துறையில்.

இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஐ படத்தில் பணியாற்றிய பல தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். தங்களின் சம்பளத்தைக் கேட்டு வருடக்கணக்கில் ஆஸ்கார் பிலிம்ஸுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். அவர்களின் சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பவர்கள், அர்னால்டு, ஜாக்கிசான் இருவருக்கும் தலா கோடிகளை கொடுத்து இசைவெளியீட்டு விழாவுக்கு கூட்டி வருகிறார்களே நியாயமா இது. என்பதே தொழிலாளர்களின் முணுமுணுப்பு.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி