செய்திகள்,முதன்மை செய்திகள் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் இந்திய எழுத்தாளர் அமிஷ் திரிபாதி!…

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் இந்திய எழுத்தாளர் அமிஷ் திரிபாதி!…

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் இந்திய எழுத்தாளர் அமிஷ் திரிபாதி!… post thumbnail image
புதுடெல்லி:-சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நோபல் பரிசு கமிட்டி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது. இந்தியாவில் அறிவியல் விஞ்ஞானி சர் சி.வி.ராமன், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் உள்பட ஏராளமானோர் பல்வேறு துறைகளிலும் நோபல் பரிசுகளை வென்றுள்ளனர்.

இலக்கியத்துறையில் ரவீந்திர நாத் தாகூருக்கு பிறகு கடந்த 100 ஆண்டுகளாக இந்தியர் யாருக்கும் நோபல் பரிசு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு அந்த குறையை போக்கும் வகையில் இந்தியரான அமிஷ் திரிபாதிக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத் ரத்னா போன்ற விருதுகளை அமிஷ் திரிபாதி வென்றுள்ளார்.

1974ம் ஆண்டு அக்டோபரில் அமிஷ் மும்பையில் பிறந்தார். கொல்கத்தாவில் உள்ள ஐஐஎம்மில் நிர்வாக மேலாண்மை பட்டம் பெற்றவர். ‘இம்மார்ட்டல்ஸ் ஆப் மெலுகா’ உள்பட பல்வேறு பிரபலமான நாவல்களை இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி