செய்திகள்,திரையுலகம் அஜீத் வழியில் நடிகர் ஜெய்!…

அஜீத் வழியில் நடிகர் ஜெய்!…

அஜீத் வழியில் நடிகர் ஜெய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் ஜெய் ‘சென்னை – 28’ படத்தில் ஒரு கிரிக்கெட் வீரராகத்தான் அறிமுகம் ஆனார். ஜெய் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவரும் கூட, ஜெய்க்கு கார் பந்தய கனவு சிறு வயதிலிருந்தே உண்டு. 12 வயதிலிருந்து விரிந்த கனவு நடிகர் அஜித் கார்ப் பந்தய வீரராக பிரபலமானதும் வலுப்பட்டது. எனக்கு தூண்டுதலும் பெரிய நம்பிக்கையும் அஜித் சார்தான். அவர் கார் பந்தயங்களிலும் நடிப்பிலும் பேசப்பட்டு பிரபலமானவர். என்கிறார் ஜெய்.

அண்மையில் இருகாட்டுக் கோட்டையில் நடந்த கார் பந்தயத்தில் 5 சுற்றுக்களில் தன் திறமையை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு சுற்றும் சுமார் 2 கீ.மீ கொண்டது. இவர் எல்லாம் கார் பந்தயத்துக்கு வந்தால் அஜீத் ஆக முடியுமா என்ற முனுமுனுப்பையும் எதிர் கொண்டவராகத் கூரும் ஜெய், அஜித் ஒரு லீடர், சிறந்த லீடர் மேலும் பல லீடர்களைத்தான் உருவாக்குவார்கள். பின்பற்றுவர்களை அல்ல. என்று நம்பும் ஜெய், பார்முலா பந்தயங்களுக்குத் தயாராகிறார். அதற்கு தகுதியான அனுவங்களையும் பயிற்சிகளையும் பெற வேண்டும்.நுட்பங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அடக்கமாக.அஜித்தை போலவே நடிப்பிலும் ரேஸிலும் கவனம் செலுத்த விரும்புகிறார் ஜெய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி