செய்திகள்,திரையுலகம் கோடம்பாக்கத்தின் செல்லப்பிள்ளை நடிகர் விமல்!…

கோடம்பாக்கத்தின் செல்லப்பிள்ளை நடிகர் விமல்!…

கோடம்பாக்கத்தின் செல்லப்பிள்ளை நடிகர் விமல்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விமல், நிஜத்தில் ரொம்ப நல்ல மனிதர். தான் நடித்த படம் வெற்றி பெற்று அந்த தயாரிப்பாளர் தனக்கு வரவேணடிய சம்பளத்தை தராமல் இருந்தால்கூட வாய் திறந்து கேட்க மாட்டார். அதோடு, ஜன்னல் ஓரம் என்ற படத்தில் நடித்தபோது படத்தை ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளருக்கு சிரமம் ஏற்பட்டதால் தனது மொத்த சம்பளத்தையும் விட்டுக்கொடுத்தார் விமல்.

தங்களுக்கு தர வேண்டிய சம்பளத்தில் ஒரு லட்சம் வரவில்லையென்றால்கூட நடிகர் சங்கம், கமிஷனர் ஆபீஸ் என்று கம்ப்ளெயிண்டுடன் செல்லும் நடிகர்-நடிகைகளுக்கு மத்தியில் விமல் இப்படி தாராளமாக விட்டுக்கொடுப்பதால் இப்போது அவர் கோடம்பாக்கத்திலுள்ள பல தயாரிப்பாளர்களின் செல்லபிள்ளையாகி விட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி