செய்திகள்,திரையுலகம் மூன்றாவது முறையாக இணையும் நடிகர் விஜய் – பிரபுதேவா!…

மூன்றாவது முறையாக இணையும் நடிகர் விஜய் – பிரபுதேவா!…

மூன்றாவது முறையாக இணையும் நடிகர் விஜய் – பிரபுதேவா!… post thumbnail image
சென்னை:-2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு போக்கிரி படத்தின் மூலம் விஜய்க்கு சூப்பர்ஹிட் வெற்றியைத் தேடிக்கொடுத்தார் இயக்குனர் பிரபுதேவா. இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை மீண்டும் ஹீரோவாக வைத்து 2009 ல் வில்லு படத்தை இயக்கினார் பிரபுதேவா. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அதன்பிறகு பிரபுதேவாவின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த எங்கேயும் காதல், வெடி படங்களும் ஓடவில்லை. எனவே, ஹிந்தியில் பிஸியாகிவிட்டார் பிரபுதேவா.தற்போது ஆக்ஷன் ஜாக்சன், சிங் இஸ் பிலிங் ஆகிய ஹிந்திப் படங்களை இயக்கி வரும் பிரபுதேவா, இப்படங்களை முடித்துவிட்டு மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி