செய்திகள்,திரையுலகம் 8 நாட்களில் படப்பிடிப்பை முடித்த பிரபல இயக்குனர்!…

8 நாட்களில் படப்பிடிப்பை முடித்த பிரபல இயக்குனர்!…

8 நாட்களில் படப்பிடிப்பை முடித்த பிரபல இயக்குனர்!… post thumbnail image
சென்னை:-தெலுங்கு, ஹிந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மா. ‘ஐஸ்க்ரீம் 2’ என்ற படத்தை 8 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னதாக ‘ஐஸ் க்ரீம்’ படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டார். இனி, தொடர்ந்து ‘ஐஸ் க்ரீம்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களை குறுகிய காலத்திற்குள் தயார் செய்து வெளியிட இருக்கிறாராம். ‘ஐஸ் க்ரீம் 2’ செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது. அதற்குள்ளாக மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கப் போகிறாராம்.

‘ஐஸ் க்ரீம்’ படத்தின் முதல் பாகத்தில் படத்தின் கதாநாயகியான தேஜஸ்வி நிர்வாணக் காட்சியில் நடிக்கிறார் எனச் சொல்லி அந்தப் படத்தின் மீதான அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால், படம் வெளியான பின் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவுமில்லை, படத்தில் அவர் சொன்னது போல் நிர்வாணக் காட்சியும் இடம் பெறவில்லை. அவையெல்லாம் வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என ரசிகர்கள் புரிந்து கொண்டு படத்தை தோல்வியுறச் செய்தனர்.இருந்தாலும் மனம் தளராத ராம்கோபால் வர்மா இதோ அடுத்த பாகத்தைத் தயார் செய்துவிட்டார். இந்த இரண்டாம் பாகத்தில் அவரின் ஆஸ்தான நடிகரான ஜே.டி.சக்கரவர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘வல்லினம்’ படத்தில் அறிமுகமான நாயகி மிருதுளா பாஸ்கர், நவீனா என்ற பெயரை மாற்றிக் கொண்டு இப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். சமீப காலமாக இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் மீடியாக்களுக்கு அனுப்பப்பட்டு வழக்கம் போலவே ஒரு பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறார் ராம்கோபால் வர்மா. இந்தப் படமும் ஒரு த்ரில்லர் படம்தான். முதல் பாகத்தை விட மிகவும் குறைந்த செலவில் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளதாம். சில நாட்கள் ஓடினாலே படம் லாபம் சம்பாதித்து விடும் என்கிறார்கள். ராம்கோபால் வர்மாவின் தயாரிப்புச் செலவையும், குறைந்த பட்ஜெட்டில் படத்தை உருவாக்குவதைப் பார்த்தும் தெலுங்குத் திரையுலகினர் மிகவும் ஆச்சரியப்படுகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி