செய்திகள்,திரையுலகம் 14 ஆண்டுகளுக்கு பின் இணையும் மணிரத்னம் – பி.சி.ஸ்ரீராம்!…

14 ஆண்டுகளுக்கு பின் இணையும் மணிரத்னம் – பி.சி.ஸ்ரீராம்!…

14 ஆண்டுகளுக்கு பின் இணையும் மணிரத்னம் – பி.சி.ஸ்ரீராம்!… post thumbnail image
சென்னை:-அலைபாயுதே படத்திற்கு பின் சுமார் 14 ஆண்டுகள் கழித்து டைரக்டர் மணிரத்னமும், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் தற்போது மீண்டும் ஒன்று சேர உள்ளனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இந்த புதிய படத்திற்கான பணிகள் செப்டம்பர் இறுதியில் துவங்கப்பட உள்ளது.

தற்போது பி.சி.ஸ்ரீராம், ஷங்கரின் ஐ மற்றும் இந்தியில் அமிதாப்பச்சன், தனுஷ் இணைந்து நடிக்கும் ஷமிதாப் ஆகிய படங்களின் இறுதி கட்ட பணியில் பிஸியாக இருப்பதால், இவற்றை தொடர்ந்து மணிரத்னத்தின் புதிய படத்தில் பணியாற்ற உள்ளார்.

மும்பையில் பிஸியாக இருக்கும் பி.சி.ஸ்ரீராம் சமீபத்தில் சென்னை வந்த போது, தனது புதிய படத்திற்கு மணிரத்னம் அவரை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் ஒளிப்பதிவை பி.சி.ஸ்ரீராமும், இசையை ஏ.ஆர்.ரகுமான் கவினிப்பார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி