செய்திகள்,திரையுலகம் தமிழில் நடிக்க வரும் பாலிவுட் நடிகை ஆலியா பட்!…

தமிழில் நடிக்க வரும் பாலிவுட் நடிகை ஆலியா பட்!…

தமிழில் நடிக்க வரும் பாலிவுட் நடிகை ஆலியா பட்!… post thumbnail image
சென்னை:-மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை ஹீரோவாக வைத்து மணிரத்னம் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக, பாலிவுட்டில் 2 ஸ்டேட்ஸ் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ஆலியா பட்டை ஒப்பந்தம் செய்ய மணிரத்னம் தரப்பு முயற்சித்து வருகிறதாம்.

இந்த தகவல் பற்றி ஆலியா பட்டின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, தங்களுக்கு தெரிந்த வரையில் அப்படி எதுவும் இல்லை என்கின்றனர். மணிரத்னம் தரப்பில் இருந்தும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் அவர்கள் மறுத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி