செய்திகள்,திரையுலகம் சுந்தர்.சியுடன் மோதிய நடிகை லட்சுமி ராய்!…

சுந்தர்.சியுடன் மோதிய நடிகை லட்சுமி ராய்!…

சுந்தர்.சியுடன் மோதிய நடிகை லட்சுமி ராய்!… post thumbnail image
சென்னை:-தீயா வேலை செய்யனும் குமாரு படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கியுள்ள படம் அரண்மனை. ரஜினி, இந்த படத்தில் ஹன்சிகா முக்கிய ரோலில் நடித்துள்ளார். கதைப்படி இந்த படத்தில் வரும் அரண்மனை யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஹன்சிகா நேரடி உரிமைதாரர் என்றபோதும், சந்தானமோ அந்த அரண்மனை உரிமையாளரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவராம். அதனால் அவரும் அந்த அரண்மனையில் உரிமை கோருவாராம்.

இப்படிப்பட்ட கதையில, சுந்தர்.சி வழக்கறிஞராக நடிக்க, வினய், ராய்லட்சுமி, ஆண்ட்ரியா ஆகியோரும முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்களாம். ஆனால், ஹன்சிகா-சந்தானத்துக்கிடையே நடைபெறும் பிரச்சினைக்கு மற்ற கேரக்டர்களின் வேடம் இடையூறாக இருக்கக்கூடாது என்று நினைத்த சுந்தர்.சி அவர்கள் நடித்த நிறைய காட்சிகளை கத்தரித்து விட்டாராம்.

இதனால் வினய், ஆண்ட்ரியா ஆகியோர் கவலைப்படாதபோதும் ராய்லட்சுமிதான் அதிக கவலையில் இருக்கிறாராம். அதோடு, ஹன்சிகாவை விட சீனியர் நடிகை நான். அதனால் என் காட்சிகளை எப்படி கத்தரிக்கலாம் என்று சுந்தர்.சியுடன் வாக்குவாதம் செய்து வருகிறாராம் ராய் லட்சுமி. அவருடனான மோதல் தொடர்ந்த போதும், அதைப்பற்றி கவலைப்படாமல் அரண்மனை படத்தை வெளியிடும் அடுத்த கட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் சுந்தர்.சி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி