செய்திகள்,திரையுலகம் நயன்தாராவை கண்கலங்க வைத்த நடிகர் ஆர்யாவின் படம்!…

நயன்தாராவை கண்கலங்க வைத்த நடிகர் ஆர்யாவின் படம்!…

நயன்தாராவை கண்கலங்க வைத்த நடிகர் ஆர்யாவின் படம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் ஆர்யா, அவரது தம்பி சத்யாவை கதாநாயகனாக நடிக்க வைத்து தயாரித்திருக்கும் படம் – ‘அமரகாவியம்’. ஜீவா சங்கர் இயக்கும் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. படம் தியேட்டருக்கு வரும் முன் இப்படத்தை தனது நெருங்கிய நணபர்களுக்கு போட்டுக் காட்ட விரும்பினார் ஆர்யா. அதன்படி சமீபத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் சிலரை அழைத்து அமரகாவியம் படத்தை திரையிட்டுக் காட்டியுள்ளார். ஆர்யா

‘அமரகாவியம்’ படத்தை பார்க்க ஆர்யாவினால் அழைக்கப்பட்டவர்களில் ஆர்யாவின் நெருங்கிய தோழி நயன்தாராவும் முக்கியவமானவர். ‘அமரகாவியம்’ படத்தை பார்த்து நயன்தாரா மிகவும் ரசித்தது மட்டுமல்ல, ரொம்பவும் ஃபீல் பண்ணினாராம். படத்தை பார்த்து முடித்ததும், அதில் இடம்பெற்ற சில காட்சிகள் அவரை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றதாகச் சொல்லி கண் கலங்கினாராம்.

அது மட்டுமல்ல அமரகாவியம் படம் பார்த்து, ஒரு வார காலம் கழித்து படத்தின் இயக்குநர் ஜீவா ஷங்கரை தொடர்பு கொண்டாராம். படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் இன்னும் என் மனதில் இருந்து போகவேயில்லை. என்னை ரொம்பவும் ஃபீல் பண்ண வைத்த ஒரு படம் ‘அமரகாவியம், கன்கிராட்ஸ்
என்று இயக்குநருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி