செய்திகள்,திரையுலகம் ஈவு இரக்கமே இல்லாத வில்லன் நடிகர் சரத்குமார்!…

ஈவு இரக்கமே இல்லாத வில்லன் நடிகர் சரத்குமார்!…

ஈவு இரக்கமே இல்லாத வில்லன் நடிகர் சரத்குமார்!… post thumbnail image
சென்னை:-சினிமாவில் வில்லனாக நடித்து ஹீரோ ஆனவர்களில் சரத்குமாரும் ஒருவர். அதன்பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். நட்புக்காக, சூர்யவம்சம், நாட்டாமை உள்பட சில படங்களில் இரண்டு வேடங்களிலும் நடித்தார். ஆனால் அப்பா-மகன், அண்ணன்-தம்பி இந்த மாதிரிதான் நடித்திருந்தார். ஆனால் இப்போது அவர் நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் ஹீரோ-வில்லன் என இரண்டுவிதமான வேடங்களில் நடிக்கிறார். இந்த இரண்டு வேடங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாதாம்.

அதோடு உருவ ஒற்றுமை இல்லாத அளவுக்கு கெட்டப்பில் நிறைய வித்தியாசப்படுத்தி நடிக்கிறாராம் சரத்குமார். முக்கியமாக, சாதாரணமாக ஹீரோக்கள் வில்லனாக நடித்தால் ஒரு வட்டத்துக்குள்தான் நடிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் சரத்குமார் நடித்துள்ள வில்லன் வேடம் மிகக்கொடூரமானதாம். கடுகளவும் ஈவு இரக்கம் என்பதே இல்லாத வில்லனாக நடித்து வருகிறாராம். அந்த வகையில், ஹீரோ சரத்குமாரை விட வில்லன் சரத்குமாருக்கு கோலிவுட்டில் ஒரு பெரிய என்ட்ரி இருக்கும் என்று சரத்குமார் எதிர்பார்க்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி