செய்திகள்,திரையுலகம் அடுத்த கணவர் யார்? பிரபல நடிகையை டென்சன் செய்த ரசிகர்கள்!…

அடுத்த கணவர் யார்? பிரபல நடிகையை டென்சன் செய்த ரசிகர்கள்!…

அடுத்த கணவர் யார்? பிரபல நடிகையை டென்சன் செய்த ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-பிரபல மலையாள நடிகையான காவ்யா மாதவன். 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்ட காவ்யா, 2011ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு, மறுபடியும் சினிமாவில் நடித்து வருகிறார்.ஆனால், காவ்யா மாதவன் தனது அடுத்த திருமணம் குறித்த செய்திகள் எதையும வெளியிடாதபோதும், இணையதளத்தில் அவருடன் தொடர்பில் இருக்கும் ரசிகர்கள், அடுத்து யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என்று கேட்டு காவ்யாவை டார்ச்சர் செய்கிறார்களாம்.

அவர் அதுபற்றி பதில் கொடுக்காதபட்சத்தில், யாராவது இளவட்ட நடிகர்களின் போட்டோவுடன் காவ்யாவின் போட்டோவையும் இணைத்து இவர் உங்களுக்கு பொருத்தமாக இருப்பார். அதனால் இவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ஆளாளுக்கு ஒரு நடிகருடன் காவ்யாவை இணைத்து அனுப்புகிறார்களாம்.இதை சில மாதங்களாக பொறுத்துக்கொண்டு வந்த காவ்யா மாதவன், இப்போது பொறுமையிழந்து விட்டார். அதனால், ரசிகர்கள் தனது விசயத்தில் ஓவர் உரிமை எடுத்துக்கொள்வதை தடுத்து நிறுத்தும் முயற்சியாக, சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார் காவ்யா. இருப்பினும் சில வம்புக்கார ரசிகர்கள் இப்போதும் தங்களது வேலையை செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி