செய்திகள்,திரையுலகம் வருவாய்த்துறை ஆபிசில் வேலை செய்யும் நடிகை ஜோதிகா!…

வருவாய்த்துறை ஆபிசில் வேலை செய்யும் நடிகை ஜோதிகா!…

வருவாய்த்துறை ஆபிசில் வேலை செய்யும் நடிகை ஜோதிகா!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவுக்கு குட்பை சொன்னார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக தன் கடமையை செய்துவிட்ட ஜோதிகா இப்போது மீண்டும் நடிப்பது என முடிவெடுத்துவிட்டார். ஜோதிகா மீண்டும் நடிக்க வர சூர்யாதான் காரணமாம். மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தை பார்த்த சூர்யாவுக்கு இந்தப் படத்தை தமிழில் ஜோவை நடிக்க வைக்கலாமே என்று தோன்றி இருக்கிறது.

இது குறித்து ஜோதிகாவிடம் பேசிவிட்டு, ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸை தொடர்பு கொண்டு, ஹவ் ஓல்டு ஆர் யூ’வின் தமிழ் ரீ-மேக்கில் ஜோதிகா நடிக்க விரும்புகிறார். என்ற தகவலை சொன்னதோடு, உங்களால் சென்னைக்கு வரமுடியுமா? என்று கேட்டாராம். இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் சென்னைக்கு வந்தார். இதற்கிடையில் ஜோதிகாவையும் சம்மதிக்க வைத்திருக்கிறார் சூர்யா. தமிழ் சினிமாவில் இத்தனை புகழோடு இருந்தவர், மீண்டும் நடிக்க வருவதென்றால் அந்தப் படத்தில் அவருக்கு தீனி போடும் கேரக்டர் அவருக்கு அமைய வேண்டுமே? அவரின் காத்திருப்பு வீண் போகாது என்றே கூறுகிறார்கள் ஹவ் ஓல்டு ஆர் யூ மலையாளப்படத்தைப் பார்த்தவர்கள்.

அந்தப் படத்தின் கதை. வருவாய்த்துறையில் கிளார்க் வேலை செய்யும் நடுத்தர வயது பெண் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அந்த வேடத்தில் மஞ்சு வாரியரை நடிக்க வைத்திருந்தனர். இப்போது அந்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி