சென்னை:-மூன்று வருட இடைவெளிக்கு பிறகு சிபிராஜ் நடித்து வரும் படம் நாய்கள் ஜாக்கிரதை.இந்தப் படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’ அருந்ததி நடித்திக்கிறார். ஏற்கெனவே சிபிராஜ் நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். தரண்குமார் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கதாநாயகனுக்கு இணையான கேரக்டரில், பயிற்சி பெற்ற பெல்ஜியம் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றும் நடிக்கிறது. பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த நாய் படப்பிடிப்பின்போது சிபிராஜை கிட்டத்தட்ட 13 தடவை கடித்து விட்டதாம். அதுமிட்டுமின்றி, இயக்குனர் ஆக்சன் என்று சொன்னதும் உடனே பாய்ந்து ஓடும் இந்த நாய் அவ்வப்போது செட்டிலுள்ள பலரை துரத்தி பயங்கர கலாட்டவெல்லாம் செய்திருக்கிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி