செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல். சூதாட்டம் – இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தியதா..?

ஐ.பி.எல். சூதாட்டம் – இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தியதா..?

ஐ.பி.எல். சூதாட்டம் – இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தியதா..? post thumbnail image
புதுடெல்லி :- ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி, இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய வீரர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டதாக வெளியான தகவல்களை இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘முட்கல் கமிட்டிக்கோ அல்லது அதன் உறுப்பினர்களுக்கோ வெளிநாடு சென்று இந்திய அணி வீரர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை.

போட்டி தொடரின் மத்தியில் வீரர்களிடம் விசாரணை நடத்தினால் அது அவர்களின் நிதானம் மற்றும் கவனத்தை குலைக்கும் என்பதை கமிட்டியினர் முழுமையாக உணர்ந்து இருக்கிறார்கள். வீரர்களிடம் விசாரணை நடந்ததாக யூகத்தின் அடிப்படையில் தவறான செய்திகள் வெளியாகி இருக்கிறது.

முட்கல் கமிட்டி கடந்த 15 மற்றும் 16–ந் தேதிகளில் சென்னையில் முகாமிட்டு விசாரணை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் குருநாத் மெய்யப்பன் ஆகியோரிடம் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி